நோபல் பரிசு வரலாற்றில், இத்தனை ஆண்டுகளில் 835 தனிமனிதர்களும், 21 நிறுவனங்களும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இதில், சிலர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றுள்ளனர். மிகச்சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப் தன்வசம் வைத்திருக்கிறார். இதுவரை 12 இந்தியர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். 5 பேர் இந்தியக் குடிமகன்கள். மீதி 7 பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். பொருளாதாரத்துக்கான முதல் நோபல் பரிசு, கடந்த 1969ல் ரேக்னர் ப்ரிஸ்க் மற்றும் ஜேன் டின் பெர்கின் -க்கு வழங்கப்பட்டது. பெண்கள் வரிசையில் முதல்முறையாகக் கடந்த 2009ல் எலினார் ஆஸ்ட்ராம் என்ற பெண், பொருளாதாரத்துக்கான பரிசைப் பெற்றார்.
நோபல் பரிசு!
கடந்த 1998ல், இந்தியரான அமர்த்தியா சென், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றார். கடந்த 2018-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு, கடந்த சில நாள்களாக அறிவிக்கப்பட்டுவந்தது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற வேதியியலாளரான ஆல்பிரட் நோபல், தனது சொத்தின் பெரும் பகுதியைப் பல துறைகளில் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பரிசு வழங்க ஏற்பாடு செய்யும்படி உயில் எழுதியிருந்தார். அதன்படி நோபல் பரிசு, கடந்த 1901 முதல் 118 ஆண்டுகளாக ஆல்பிரட் நோபலின் நினைவாக, அவர் பிறந்த இடமான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோல்மில், அவர் பெயரிலேயே 6 துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது .
இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகியவற்றிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நோபல் பரிசு மட்டும் ஸ்வெரிக்ஸ்ரிக்ஸ் பேங்க் பரிசு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நோபலின் நினைவாக வழங்கப்படும் இந்தப் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த எஸ்தர் ட்யூப்லோ மற்றும் மைக்கேல் க்ரிமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், எஸ்தர் ட்யூப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகியோர் தம்பதிகளாவர். உலகில், ஏழ்மையைப் போக்கும் பொருளாதாரரீதியிலான முயற்சிக்காக, இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண் என்ற பெருமையை எஸ்தர் ட்யூப்லோ பெற்றார். அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் ட்யூப்லோ, அமெரிக்காவில் உள்ள மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். மைக்கேல் க்ரிமர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவராவார்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது