நீண்ட நேரப்பயணத்திற்குப் பின் களைப்பு ஏற்பட்டால், அந்தக் களைப்பைப் போக்க, உப்பு பெருமளவு உதவுகிறது. ஒரு பெரிய பேசினில் வெதுவெதுப்பான நீர் எடுத்து, அதில் சிறிதளவு உப்பு கலந்து, ஒரு பதினைந்து நிமிடங்கள் கால்கள் நனையும்படி உட்கார்ந்தால், கால்வலி, களைப்பு எல்லாம் பறந்து போகும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, குழந்தைகளைக் குளிப்பாட்டினால் குழந்தைகளின் தோலின் மென்மையை ஆலிவ் ஆயில் பராமரிக்கும்.
திராட்சைப்பழம் கிட்னிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பழம், மலமிளக்கியாகவும் பயன்படும். இதை, பழமாகவோ, பழரசமாகவோ உண்டால், நேரடி பலன் கிடைக்கும்.
இரவு மீந்துபோன சாதத்தை ஹாட்பேக்கில் வைத்திருந்து, காலையில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் செய்யலாம் அல்லது. சிறிது நீர்விட்டு மசித்து, ஸாலட் அல்லது உருளைக்கிழங்கு மசியலோடு கலக்கலாம்.
குழந்தையைக் குளிப்பாட்டும்போது, தண்ணீரில் சிறிதளவு டெட்டாலையும், சிறிதளவு உப்பையும் கலந்து குளிப்பாட்டினால் குழந்தையின் மென்மையான தோல் மேலும் மென்மையாக ஆவதுடன், எந்தவித தோல் வியாதிகளும் வராது. தண்ணீரை விளாவியபின்பு தான் டெட்டாலையும், உப்பையும் சேர்க்க வேண்டும்.
தர்பூசணித் தோல், பரங்கிக்காய் தோல், பீர்க்கங்காய்த் தோல், வெந்த உருளைக்கிழங்கு அல்லது பச்சை உருளைக்கிழங்கு தோல், சுரைக்காய் தோல் போன்றவற்றிலிருந்து, வங்காளிகள் விதவிதமான துவையல்கள் செய்கின்றனர்.
தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து அருந்தினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
கருவுற்ற தாய்மார்கள் ஆறாம் மாதத்திற்குப் பின், அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி பார்லி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து, கொதிக்கும் நீரில் போட்டு, கொதிக்கவைத்து எடுத்து, ஆறியபின் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறும், உப்பும் சேர்த்து காலை, மாலை அருந்தி வர, நீர் சுருக்கு நீங்கி, கால் வீக்கம் வடியும். மேற்படி பார்லி நீரை காலையிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டு, தேவையானபோது, சூடு செய்து, எலுமிச்சைச் சாறும், உப்பும் கலக்கலாம். எலுமிச்சைச் சாறும், உப்பும் கலந்து வைத்துவிட்டோமானால், வெகு சீக்கிரம் புளிப்பு ஏறி, அசிடிடி உருவாகும்.
தக்காளி சூப் தயாரிக்கும்போது, சிறிது கசகசாவை நெய்யில் வறுத்து, பொடித்துப்போட்டால், சூப் மணமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
எள், கசகசா இரண்டும் ஒவ்வொரு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி ஓமம், கால் தேக்கரண்டி மிளகு ஆகியவற்றை சிறிது நெய் அல்லது எண்ணெய்யில் மணம் வரும்வரை வறுத்து, உப்பு சேர்த்து, கரகரப்பாக பொடித்து, சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், புதுவிதமான சுவையும், மணமும் கிடைக்கும். வயிற்றுப்புண் ஆறும். கபம் நீங்கும். வெயிலில் அலைந்த களைப்பும் நீங்கும்.
தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய
தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
தலைப்புக்கு வரலாமா? வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
- சரசுவதி பஞ்சு
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது