நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்த மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இவர்கள் மூவரும் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்.
இன்று இரவு எல்லோரும் தங்கள் சொந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி தலைமையிடத்திற்கு செல்வார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி குறித்து விவாதம் நடத்தப்படும்.
ஸ்பேஸ் ஸ்டேஷன் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன்
விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் மூலம் விண்வெளியில் பல ஆராய்ச்சிகள் செய்யப்படும். தொடர்ந்து பல மாதங்களாக தங்கி அவர்கள் ஆராய்ச்சி செய்வது உண்டு.
மூன்று நாடு
மூன்று நாட்டை சேர்ந்தவர்கள்
மூன்று நாட்டை சேர்ந்தவர்கள்
தற்போது மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 5 மாதமாக விண்வெளி உள்ள ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு சோதனைகள், ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி குறித்த முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.
யார்
யார் இவர்கள்
யார் இவர்கள்
ரஷ்யாவை சேர்ந்த ஆண்டன் ஷாக்கப்பெர்லோவ், அமெரிக்காவை சேர்ந்த ஸ்காட் டிங்கில், ஜப்பானை சேர்ந்த நொர்ஷிக் கனாய் ஆகியோர் தற்போது ஆராய்ச்சி முடித்து திரும்பியுள்ளனர். 5 மாதம் விண்வெளியில் இருந்ததால் இவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இதனால் இவர்கள் தற்போது மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.
எப்படி
எப்படி வந்தனர்
எப்படி வந்தனர்
இவர்கள் பூமிக்கு திரும்பி வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கஜகஸ்தான் பாலைவன பகுதியில் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். தனிதனி கேப்ஸ்யூல் மூலம் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். பூமியை நெருங்கும் போது ராட்சச பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். இவர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.
source: oneindia.com
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது