தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் கூறியதாவது:
பல ஆண்டு போராட்டத்தின் காரணமாக நிர்வாக வசதிக்காக பள்ளிக் கல்வித்துறையில் இருந்து தொடக்கக் கல்வித்துறை தனியாக பிரிக்கப்பட்டது.
தற்போது வட்டார, மாவட்ட அளவில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை பள்ளிக் கல்வித்துறையுடன் மீண்டும் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யவலியுறுத்தி 8ம் தேதி தமிழகம் முழுவதும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது