அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10ம் வகுப்பு துணை தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பத்தாம் வகுப்புக்கு, மார்ச்சில் நடந்த பொது தேர்வுக்கு விண்ணப்பித்து, பங்கேற்க முடியாதவர்கள்; தேர்வில் பங்கேற்று ஏதாவது சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூனில் சிறப்பு துணை தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். 


முடிவுகளை, http://www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், இன்று பிற்பகலில் தெரிந்து கொள்ளலாம். தற்காலிக சான்றிதழ்களையும், இன்றே பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை மற்றும் நாளை மறுநாள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும், ஒப்புகை சீட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Reactions

Post a Comment

0 Comments