டில்லி:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சுமார் 24 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில்களில் இது குறித்த புள்ளி விபரங்கள் இடம்பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை அளிக்கப்பட்ட பதிலில் ஆரம்ப பள்ளிகளில் 9 லட்சம், இடைநிலை பள்ளிகளில் 1.1. லட்சம் என மொத்தம் 10.1 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
காவல் துறையில் 5.4 லட்சம், ரெயில்வேயில் 2.4 லட்சம், அங்கன்வாடி பணியாளர்கள் 2.2 லட்சம், சுகாதார மையங்கள் 1.5 லட்சம், ராணுவம் 62,084, துணை ராணுவம் 61,509, எய்ம்ஸ் 21,740, இதர உயர் கல்வி நிறுவனங்கள் 12,020, நீதிமன்றம் 5,853 என மொத்தம் 23.8 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது