சென்னை: இந்திய மருத்துவம், ஓமியோபதி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: 2019-20 கல்வியாண்டுக்கு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் செயல்பட்டுவரும் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்கள்/ நிர்வாக ஒதுக்கீடு (சிறுபான்மையினர் மற்றும் சுயநிதி) எம்.டி ஓமியோபதி இடங்களுக்கு ஏஐஏபிஜிஇடி-2019 தேர்வில் தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பதிவிறக்கலாம். விண்ணப்ப படிவத்தை அக்டோபர் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அக்டோபர் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, அரும்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது