அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

இறுதி ஆண்டு தேர்வு எழுத முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனை

முதுகலை மருத்துவ மாணவர்கள், இறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற மாவட்ட ஆஸ்பத்திரிகளில் 3 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரங்களுடன் செயல்படும் நிர்வாகிகள் குழு (போர்டு ஆப் கவர்னர்ஸ்) இந்த யோசனையை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை அமல்படுத்துமாறும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமின்றி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments