தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுகள், இம்மாதம், 4, 5, 6ம் தேதிகளில் நடந்தன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தேர்வின், மதிப்பீட்டு பணி நடந்து வருகிறது. இதன் அடிப்படையில், தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகளில், வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஈடுபட்டுள்ளது.
இதற்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளது.இதன்படி, நவம்பர் நான்காவது வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரி பார்த்தல், உடற்தகுதி ஆய்வு, உடற்தகுதி தேர்வு போன்றவை, சென்னையில்நடக்கும்.இதன்பின், நவ., 30க்குள், தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்து உள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது