1 . தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் , இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை- ஆண் , பெண் மற்றும் திருநங்கை ) , இரண்டாம் நிலைக் காவலர் ( தமிழ்நாடு சிறப்புக் காவல்படை -ஆண் ) இரண்டாம் நிலை சிறைக் காவலர் ( ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் ( ஆண் ) பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020 - க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பத்தினை ( Online application ) வரவேற்கிறது.
2 . விண்ணப்பதாரர்கள் இக்குழும www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . ஏனைய இதர வழிகளான விண்ணப்பப் படிவம் மற்றும் தட்டச்சுப் படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
3 . இத்தேர்விற்குரிய முழு விவரங்கள் அடங்கிய தகவல் சிற்றேட்டினை இக்குழும www.tnusrbonline.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பத்தினை நிரப்பிடுவதற்கு முன்னர் , இக்குழும இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேடு மற்றும் விண்ணப்பம் எப்படி சமர்ப்பிக்க வேண்டும் எனும் அறிவுரையினையும் பதிவிறக்கம் செய்து அவற்றிலுள்ள விவரங்களை முழுமையாகப் படித்த பின்னர் இணைய வழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
4. காலிப்பணியிடங்கள் : 10,906 . துறைவாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Police Exam Notification 2020 - Download here...
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது