பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை முடிகிறது.
தமிழகத்தில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில், முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப் படுகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், இந்த கவுன்சிலிங்கை நடத்துகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, செப்டம்பர், 8ல் துவங்கியது. நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.
பிளஸ் 2 முடித்து, 'நாட்டா' என்ற தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம். இதையடுத்து, சான்றிதழ் பதிவேற்றம் அறிவிக்கப்படும் என, கவுன்சிலிங் சேர்க்கை குழுவினர் தெரிவித்தனர்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது