வரும் 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்பு வரும் 19ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், விடுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் பள்ளிக்கல்வி துறையின் அந்த உத்தரவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 1173 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 30 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பள்ளிகல்வித்துறை விடுவித்துள்ளது.
31 ஆயிரத்து 297 அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் 1.56 கோடி ரூபாயை பள்ளிகல்வித்துறை விடுவித்துள்ளது. நிதியைப் பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது