GO NO : 10 , DATE : 18.01.2021
2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளை தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யவும் மற்றும் இப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தவும் / தோற்றுவிக்கவும் ஆணை வழங்குமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்து , மாணவ / மாணவியர் நலன் கருதி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் குறித்து கீழ்க்காணுமாறு அரசு ஆணையிடுகிறது .
2020-21ஆம் ஆண்டில் முதற்கண் இணைப்பில் உள்ள 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் , 1-5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது