உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதிக்கான 171 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/ 2019 வெளியிடப்பட்டு முதல்நிலை எழுத்துத் தேர்வு 24.11.2019 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் 7,942 பேர் கலந்துகொண்டனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வு, 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 239 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து தற்போது நேர்காணல் தேர்வுக்குத் தற்காலிகமாக 58 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியாகியுள்ளது.
அவர்களுக்கு பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது