*உலக சாதனை நிகழ்வு*
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகியோர் இணைந்து இராமேஸ்வரத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த உலக சாதனை நிகழ்வில் *முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் செய்யது அகமது சமீர் என்ற மாணவன்* தயாரித்த செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கை கோள்கள் உதவியுடன் பூமியின் தட்ப வெட்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
அம்மாணவனுக்கு *கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு, ஆசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு* என ஐந்து உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
உலக சாதனை புரிந்த மாணவனை முகம்மதியா பள்ளிகளின் தாளாளர், முகம்மதியா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது