அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

11-ம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வு விவகாரம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் நிலை ஏற்படவில்லை.

எனவே, கடந்த ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், தற்போது இந்த ஆண்டும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வுகள் நடத்தப்படுமாலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ஆனால், மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.


பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு முன்பு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகிய நிலையில் வருகின்ற கல்வியாண்டில் 10-ல் இருந்து 11ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments