இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் முதல்வராக பதவியேற்றதும் இன்று முதன்முதலாக தலைமைச் செயலகத்துக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.
முதல் கோப்பாக கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் கையெழுதித்திட்டுள்ளார்.
இரண்டாவது கோப்பாக ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைப்பு மே 16ஆம் தேதி முதல் அமல்.
3வது கோப்பாக தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
4வது கோப்பாக மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணியாளர் பொறுப்பு என அறிவிப்பு .
5வது கோப்பாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்*
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது