தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் பள்ளிகளிலேயே கரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் 76 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி வருகின்றன. இருப்பினும், பொங்கல் விடுமுறை முடிந்துள்ளதால் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது