அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரிக்கும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.


இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒமைக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக் கூடிய தன்மைக் கொண்டது. டெல்டா வகை கரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் முழுமையாக குறையவில்லை. அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என்பதை பொதுமக்கள் மனதில் வைத்து, அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments