அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும், பள்ளி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
அந்த கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து பங்கேற்க வேண்டும். அந்த கூட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனை, தற்போது கற்றல் பணிகள் தொடர்பான ஆலோசனை, கல்வி நிலைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு தொடர்பான ஆலோசனையை கிராம சபை கூட்டங்களில் முன்வைத்து உரிய ஆலோசனையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அந்தந்த பகுதிகளில் இருக்க கூடிய பள்ளிகளில் அந்த பள்ளியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறன என்பதை கிராம சபை கூட்டங்களில் முன்வைத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது