அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஏன் AMBULANCE - ECNALUBMA என்று திருப்பி எழுதப்படுகிறது?

ஆம்புலன்ஸில் மட்டும் எழுத்துகள் திருப்பி எழுதியிருப்பது ஏன், டிங்கு?
இப்படி எழுதுவதற்கு ‘கண்ணாடி பிம்ப எழுத்துமுறை’ (Mirror writing) என்று பெயர். இந்த எழுத்துகளைக் கண்ணாடி முன் வைத்துப் படித்தால் சாதாரணமாகப் படிக்கமுடியும். அந்தக் காலத்தில் ரகசியங்களை இப்படி யாருக்கும் எளிதில் புரியாத மாதிரி எழுதி வைத்தார்கள். ஆம்புலன்ஸில் கண்ணாடி பிம்ப எழுத்துமுறையில் எழுதி வைத்தால், முன்னே செல்லக்கூடிய வாகனங்களின் பின்பக்கம் பார்க்கக்கூடிய கண்ணாடியில் ‘AMBULANCE’ என்று சரியாகத் தெரியும். அதனால் முன்னே செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸுக்கு இடம் விட்டுச் செல்ல உதவியாக இருக்கும், யுவன் ஆதித்தியா. லியனார்டோ டாவின்சி தன்னுடைய குறிப்புகளை எளிதில் யாரும் படிக்க முடியாதபடி, கண்ணாடி பிம்ப எழுத்துமுறையில் எழுதி வைத்திருக்கிறார்.

Reactions

Post a Comment

0 Comments