ஆயிரங்கால் பூச்சியைத் தொட்டால் சுருண்டுகொள்வது ஏன் டிங்கு?
மரவட்டையின் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓடால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. ஆபத்து ஏற்படும்போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் உணர்வு செல்கள் மூலம் ஆபத்தை உணர்ந்ததும் உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கிறது. அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்துவிட முடியாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பு. அப்புறம், மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது.
சோப்பு முட்டை விட்ட அனுபவம் உண்டா டிங்கு? சோப்புக் குமிழியில் வண்ணம் எப்படி உருவாகிறது?
சோப்பு முட்டைகள் விடாதவர்கள் யாராவது இருக்க முடியுமா ஜோயல்? குழந்தைப் பருவத்தில் சோப்புத் தண்ணீரிலிருந்து தோன்றும் குமிழிகளைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். யாருடைய குமிழி உடையாமல் நீண்ட நேரம் இருக்கிறது என்ற போட்டியெல்லாம் நடக்கும்.
சோப்புக் குமிழ்களின் மீது வெளிச்சம் ஊடுருவிச் செல்லும்போது, சோப்புப் படல அடுக்குகளில் ஒளி பிரதிபலிக்கப்பட்டுச் சிதறடிக்கப்படுகிறது. அப்போது நிறங்கள் பிரிந்து வானவில் நிறங்கள் தோன்றும். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா ஜோயல், எல்லாக் குமிழிகளும் வண்ணமயமாக இருப்பதில்லை. பெரும்பாலான குமிழிகள் நிறமற்றவையாகவே உள்ளன.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது