அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : மரவட்டை சுருள்வது ஏன்? சோப்புக் குமிழியில் வண்ணம் உண்டாவது எப்படி?

ஆயிரங்கால் பூச்சியைத் தொட்டால் சுருண்டுகொள்வது ஏன் டிங்கு?
மரவட்டையின் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓடால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. ஆபத்து ஏற்படும்போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் உணர்வு செல்கள் மூலம் ஆபத்தை உணர்ந்ததும் உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கிறது. அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்துவிட முடியாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பு. அப்புறம், மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது.

சோப்பு முட்டை விட்ட அனுபவம் உண்டா டிங்கு? சோப்புக் குமிழியில் வண்ணம் எப்படி உருவாகிறது? 
சோப்பு முட்டைகள் விடாதவர்கள் யாராவது இருக்க முடியுமா ஜோயல்? குழந்தைப் பருவத்தில் சோப்புத் தண்ணீரிலிருந்து தோன்றும் குமிழிகளைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். யாருடைய குமிழி உடையாமல் நீண்ட நேரம் இருக்கிறது என்ற போட்டியெல்லாம் நடக்கும்.
சோப்புக் குமிழ்களின் மீது வெளிச்சம் ஊடுருவிச் செல்லும்போது, சோப்புப் படல அடுக்குகளில் ஒளி பிரதிபலிக்கப்பட்டுச் சிதறடிக்கப்படுகிறது. அப்போது நிறங்கள் பிரிந்து வானவில் நிறங்கள் தோன்றும். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா ஜோயல், எல்லாக் குமிழிகளும் வண்ணமயமாக இருப்பதில்லை. பெரும்பாலான குமிழிகள் நிறமற்றவையாகவே உள்ளன.
Reactions

Post a Comment

0 Comments