அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : பல்லி ஏன் கீழே விழுவதில்லை? மருதாணி ஏன் சிவக்கிறது? வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வருவது ஏன்?

மருதாணி ஏன் சிவக்கிறது?
மருதாணியை அரைத்தவுடன் அதில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமியால் தோல் சிவக்கிறது.

பல்லி ஏன் கீழே விழுவதில்லை?

பல்லியின் பாதங்களில் செதில்கள் போன்ற மிகச் சிறிய ரோமங்கள் இருக்கின்றன. பாதங்களிலும் விரல்களிலும் இருக்கும் இந்த ரோமங்கள், சுவரிலோ அல்லது மற்ற பரப்பிலோ உள்ள கண்களுக்குத் தெரியாத மேடு, பள்ளங்களைப் பிடித்துக்கொண்டு கீழே விழாமல் பல்லியைக் காக்கின்றன. இதனால் பல்லி மேற்கூரையிலும் சுவரிலும் எளிதாக நடந்து செல்கிறது.

 வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வருவது ஏன்?

வெங்காயத்தில் அலினேஸ், சிஸ்டைன் ப்ரோப்பேனிதியல் சல்பாக்ஸைடு இருக்கின்றன. வெங்காயத்தை நாம் நறுக்கும்போது இந்த இரண்டும் வேதி வினைபுரிந்து, ப்ரோப்பேன் சல்பினிக் அமிலமாக மாற்றமடைகிறது. இந்த அமிலம் விரைவாகக் காற்றில் கலந்து, நம் கண்களை அடைந்து, கண்ணீரை வரவழைக்கிறது, ஜெயலஷ்மி.

Reactions

Post a Comment

0 Comments