அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மெழுகுவர்த்தியைக் கீழ் நோக்கிப் பிடித்தாலும் மேல் நோக்கி நெருப்பு எரிகிறதே, ஏன்?

மெழுகுவர்த்தியைக் கீழ் நோக்கிப் பிடித்தாலும் மேல் நோக்கி நெருப்பு எரிகிறதே, ஏன்?
நெருப்பில் இருந்து வரும் சூடான காற்று, சுற்றிலும் இருக்கும் குளிர்ந்த காற்றைவிட எடை குறைவானது. அதனால் எடை குறைவான காற்றை, எடை அதிகமான குளிர்ந்த காற்று மேல்நோக்கித் தள்ளுகிறது. எனவே நெருப்பு, மேல் நோக்கி எரிகிறது.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 3 கிராம் சோடியம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு சோடியம் குளோரைடு. இதை 5 கிராம் அளவுக்கு எடுத்துக்கொண்டால் போதுமானது. ஆனால், நாம் இந்த அளவைவிட அதிகமான உப்பை எடுத்துக் கொள்கிறோம். இதைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் உட்பட நொறுக்குத்தீனிகளில், ஐஸ்க்ரீம்களில், பானங்களில் எல்லாம்கூட உப்புகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் நம் உடலில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. அவசியம் இல்லாத உணவைக் குறைத்துக்கொள்வது நல்லது.
Reactions

Post a Comment

0 Comments