அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : தீ மிதிக்கும்போது ஏன் கொப்புளங்கள் வருவதில்லை?

எங்கள் ஊரில் தீ மிதித் திருவிழா நடக்கும் அதில் நடந்து செல்பவர்களுக்கு மட்டும் காலில் கொப்புளங்கள் வருவதில்லையே, ஏன் டிங்கு?
– ஆர். அகல்யா தேவி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை.
 
தீ மிதித் திருவிழாவில் பற்றி எரியும் நெருப்பில் யாரும் நடப்பதில்லை. மரக்கட்டைகள் நன்கு  எரிந்து, தணிந்து, அவற்றின் மீது சாம்பல் பூத்திருக்கும். அப்போதுதான் இறங்கச் சொல்வார்கள். நம் தோலைவிட உள்ளங்கால் தோல் தடிமனாக இருக்கும். தீயில் இறங்குகிறவர்கள் மீது தண்ணீர் ஊற்றிவிடுவார்கள். கால் ஈரமாக இருக்கும். நெருப்பில் இறங்கும்போது காலில் உள்ள ஈரம் காய்ந்து, தடித்த தோலைத் தாண்டிதான் நெருப்பால் காயத்தை ஏற்படுத்த முடியும்.
அதனால் தீ மிதிப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் வேகமாக ஓடிச் சென்றுவிடுவார்கள். இதன் காரணமாகவே அவர்களுக்குத் தீக்காயம் ஏற்படுவதில்லை. எங்கள் பாட்டி விறகு அடுப்பில் சமைக்கும்போது, கங்குகளைக் கையால் எடுத்து தூக்கிப் போடுவதைப் பார்த்திருக்கிறேன். தடித்த தோலும் வேகமான செயல்பாடும் காயம் இன்றி தப்ப உதவுகின்றன. உலோகங்களைப்போல் மரக்கட்டைகள் சிறந்த வெப்பக்கடத்திகள் அல்ல, அகல்யா தேவி.
Reactions

Post a Comment

0 Comments