அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

SCIENCE DOSE : உயிரோடு இருக்கும்போது தண்ணீரில் மூழ்கும் உடல், இறந்த பிறகு மிதப்பது ஏன், டிங்கு?

– அ.ரா. அன்புமதி, 5-ம் வகுப்பு, மைக்கேல் ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.
நல்ல கேள்வி, அன்புமதி. உயிரோடு இருக்கும்போது தண்ணீரின் அடர்த்தியைவிட உடலின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அதனால் உடல் மூழ்கிவிடுகிறது. அடியில் சென்ற உடலின் நுரையீரலுக்குள் தண்ணீர் அதிகமாகச் சென்றுவிடுவதால் மரணம் ஏற்படுகிறது. இரண்டு, மூன்று நாட்களில் உடல் அழுக ஆரம்பிக்கும்.

உடலின் மேல் பகுதியிலும் உட்பகுதியிலும் பெருகும் பாக்டீரியாக்கள் சர்க்கரையையும் புரதத்தையும் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. இதனால் உடலில் இருந்து மீத்தேன், அமோனியா, கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறுகின்றன. உடல் அழுகி, வீங்க ஆரம்பிக்கும்.  உடலிலிருந்து புதிய வாயுக்கள் உருவாகி, உடலை மேல்நோக்கித் தள்ளும்.
இப்போது உடலின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால், மேலே வந்து மிதக்கிறது. தலைப்பகுதி தண்ணீருக்குள்தான் இருக்கும். தலையின் எடையைவிட, குறைவான அளவு தண்ணீரை வெளியேற்றுவதால் தலை தண்ணீருக்குள் இருக்கிறது.
THANKS TO:
இந்து தமிழ் திசை
Reactions

Post a Comment

0 Comments