நிற்பதைக் காட்டிலும் உட்கார்ந்திருக்கும்போது களைப்பு குறைவாகவே ஏற்படும் , படுத்துக் கொண்டிருந்தால் அந்தக் களைப்பும் தோன்றாது
தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் அமைந்துள்ள உயரம் குறையக் குறைய, நிலையாற்றலும் குறைகிறது. குறைந்த நிலையாற்றலில் , களைப்பு ஏற்படாத வகையில் நீண்ட நேரம் அந்நிலையில் இருக்க முடிகிறது.
சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ( ஈர்ப்பு மைய ) உயரம் அதிகமாக இருக்கும். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது உடலில் ( ஈர்ப்பு மைய ) உயரம் குறைவாக இருக்கும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும்போது , இடுப்பிற்கு மேலும் உடலின் எடை புட்டங்களை அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது , உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் , சாய்வு நாற்காலியில் அதிக நேரம் அமர முடிகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது