அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

சாய்வு நாற்காலியில் நீண்ட நேரம் அமர முடிகிறது. ஆனால் சாதாரண நாற்காலியில் அவ்வாறு முடிவதில்லையே ஏன்?


நிற்பதைக் காட்டிலும் உட்கார்ந்திருக்கும்போது களைப்பு குறைவாகவே ஏற்படும் , படுத்துக் கொண்டிருந்தால் அந்தக் களைப்பும் தோன்றாது
தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் அமைந்துள்ள உயரம் குறையக் குறைய, நிலையாற்றலும் குறைகிறது. குறைந்த நிலையாற்றலில் , களைப்பு ஏற்படாத வகையில் நீண்ட நேரம் அந்நிலையில் இருக்க முடிகிறது.


சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ( ஈர்ப்பு மைய ) உயரம் அதிகமாக இருக்கும். சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது உடலில் ( ஈர்ப்பு மைய ) உயரம் குறைவாக இருக்கும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும்போது , இடுப்பிற்கு மேலும் உடலின் எடை புட்டங்களை அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும்போது , உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் , சாய்வு நாற்காலியில் அதிக நேரம் அமர முடிகிறது.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments