அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அறிவியல் உண்மை - மேக மூட்டமாக இருக்கும்போது வியர்ப்பது ஏன்?


சுற்றுப்புற வெப்பநிலை உயரும்போது , நம் உடலின் வெப்பநிலையம் உயரத் தொடங்குகிறது. அப்போது உடலின் வெப்பநிலையை 98.4°f அளவில் நிலைநிறுத்துவதற்காக வியர்வை வெளிப்படுகிறது. வியர்வை ஆவியாகும்போது உடலின் வெப்பநிலை குறையும்.


காற்றிலுள்ள ஈரப்பதத்தின் அளவு , வியர்வை ஆவியாகும் வேகத்தைப் பாதிக்கிறது. ஈரப்பதம் குறைந்தால் ஆவியாகும் வேகம் கூடும். ஈரப்பதமும் சுற்றுப்புற வெப்ப நிலையும் குறைவாக இருக்கும்போது , வியர்க்காமல் இருக்கும் , அப்படியே வியர்த்தாலும் உடனே ஆவியாகிவிடுகிற வயாகிவிடுகிறது. இதனால் உடலுக்கு இதமாகவும் இருக்கிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ( air conditional ) அறையில் இந்த நிலை ஏற்படுகிறது. மேகமூட்டமாக இருக்கும் போது வெயில் இல்லாவிட்டாலும் வெப்பநிலையும் , ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். மேகங்களில் நீர் மூலக்கூறுகள் கதிரவனின் அகச்சிவப்புக் கதிர்களை பெருமளவில் உட்கவர்ந்து காற்றின் வெப்பநிலையையும் உயர்த்துகின்றன.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments