பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் , பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III- ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் தற்போது காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு , தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி வகுப்பு IV- ஐச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் பணி முதுநிலையில் முந்துரிமையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6 ( 1 ) -ன்படி மாவட்டக் கல்வி அலுவலர் பணி நிலையில் மூன்று ஆண்டு கால பணிக்காலத்தை நிறைவு செய்யாததால் , அவர்கள் பொருட்டு தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் விதி 6 ( 1 ) -க்குத் தளர்வு அளித்து , தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் ) சட்டம் , 2016 பிரிவு 47 ( 1 ) -இன்கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பதவிகளுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்து , அவர்கள் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது . கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் இத்தற்காலிக பதவியுயர்வு பின்வரும் காலத்தில் முன்னுரிமை கோரும் உரிமையை அவர்களுக்கு அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது