வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் அவர்கள் விளக்கம்அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச்மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தமிழகத்தில்படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி19 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளநிலையில், வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசுஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்றவகுப்புகளுக்கு (1 முதல் 8) பள்ளிகள் திறப்புகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்அளித்துள்ளார்.
🛑ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில்செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுத உள்ளமாணவர்களுக்கு தேர்வு அட்டவணைவெளியிடப்படப்பட்டவுடன் வினா வங்கி கையேடுவழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மற்ற
மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஹைடெக்லேப் உள்ளது என கூறிய அமைச்சர், நீட் மற்றும்ஜேஇஇ படத்திட்டங்களை குறைப்பது குறித்துமத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் ஏன்கூறியுள்ளார்.
🛑அதுமட்டுமின்றி யூடியூப், கியூஆர் கோடு மற்றும்கல்வி தொலைக்காட்சி என பல்வேறுவழிமுறைகளில் மாணவர்களுக்கு பாடங்கள்கற்பிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.பின்னர் 9 முதல் 12ம் வகுப்புகள் தவிர்த்து மற்றமாணவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில்பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர்முடிவெடுப்பார் என தெரிவித்த அமைச்சர், பிறமாநிலங்களில் 6ம் வகுப்பு மாணவர்களுக்குபள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து முதல்வர்கவனித்து வருவதாக கூறியுள்ளார்.


0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது