தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நடைபெறும் ஆள் மாறாட்டங்களை தவிர்க்க ஆதார் அட்டை அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ சேவையை நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
‘பயோ மெட்ரிக்’ முறை:
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் அதிகம் ஆள் மாறாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுகளில் அதிக மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் நடைபெற்ற இந்த தேர்வில் சில நேரங்களில் விதி மீறல்களும் நடைபெறுகின்றன.
இதனை தடுக்கும் விதத்தில் டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி போட்டித் தேர்வு நடத்தப்படும் தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த திட்டத்திற்கான நிறுவனத்தை தேர்வு செய்து அதன்பின் மார்ச் மாதம் நடத்தப்படும் துறை தேர்வுகள், இன்ஜினியரிங் பணி தேர்வுகள், குரூப் 4, குரூப் 2, குரூப் 1 தேர்வுகளில் பயோ மெட்ரிக் முறை அமலுக்கு வரும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது