PSTM – Person Studied in Tamil Medium சான்றிதழ் பற்றிய விளக்கம்!!
TNPSC தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், அரசாணை, தேர்வாணைய நடைமுறைகள் என பலவற்றில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதில் ஜனவரி 30ம் தேதி முதல் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது பணியில் இருந்து கொண்டு TNPSC தேர்வெழுதும் தேர்வர்கள் ‘தடையின்மை சான்றிதழை’ சமர்ப்பிக்க அல்லது பதிவேற்றம் செய்ய தவறினால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
மாநிலத்தின் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்களுக்கான விதிகளின் கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் வழியில் படித்ததற்கான (PSTM – Person Studied in Tamil Medium) உரிமை கோரும் விண்ணப்பதாரர் அதற்கான சான்று ஆவணமாக, நிர்ணயம் செய்யப்பட்ட கல்வித்தகுதி வரை அனைத்து படிப்புகளையும் தமிழ் வழியில் மட்டுமே பயின்றதற்கான சான்றிதழை கட்டாயமாக பதிவேற்றம் / சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு படிப்புக்கு பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.
ஒரு படிப்புக்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக இருந்தால், விண்ணப்பதாரர் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு என மூன்றும் தமிழ் வழியில் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது