அரசு
பள்ளியில், ஒரு மாணவன் பிளஸ் 1 வகுப்பில்தான், கணினி அறிவியல் படிக்க
முடிக்கிறது.கடந்த, 2009ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, 'ஆறு முதல்
10ம் வகுப்பு வரை தனி பாடமாக கணினி அறிவியல் கொண்டு வரப்படும்' என
அறிவித்தார். இதற்காக, கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக இருந்தது.
ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கைகூடவில்லை.தமிழ்நாடு பி.எட்., கணினி
அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர்
குமரேசன் கூறியதாவது:கடந்த 2011ல் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள்
அச்சிடப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க தயாராக இருந்தன. ஆனால், இதை
அ.தி.மு.க., அரசு நிராகரித்தது.
ஸ்டாலின்
தலைமையிலான தமிழக அரசு, இத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும்
என எதிர்பார்க்கிறோம்.கருணாநிதி அறிவித்தபடி, ஆறாம் வகுப்பு முதல் கணினி
அறிவியல் பாடம் கொண்டு வர வேண்டும்; கணினி அறிவியல் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்
கூறினார்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது