12 Mark Calculation Method 2021
பிளஸ் 2 பொதுத்தேர்வு - மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு
10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது :
👉12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20)மற்றும் அக மதிப்பீட்டில் 10 என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்ளகொள்ளப்படும்.
👉செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக பதிப்பீட்டில் 10 பெற்ற மதிப்பெண் 30 பதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 அம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுித்துக்கொள்ளப்படும்.
👉11 ஆம் வகுப்பு பற்றும் 12 அம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
👉 கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ. அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்
👉11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு. அக மதிப்பீடுசெய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அகமதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வுநிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாதமாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதவாய்ப்பு வழங்கப்படும்.
👉 ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு. உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறைஇணையதளத்தில் வெளியிடப்படும்
👉இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் பதிப்பெண்கள் தமக்குக் குன்றவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அங்வாறுநடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதிபதிப்பெணெணொக அறிவிக்கப்படும்.
👉தனித்தேர்வு எழுதவிருக்கும்மாணவர்களுக்கு கொரோனா கொரொன தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன். மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான காலஅட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.



0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது