கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் 31.01.2022 வரை இரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பார்வை 2 - ல் காணும் அரசு செய்தி வெளியீட்டின்படி , மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பார்வை 1 - ன் படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 01.02.2022 முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் ( 100 % ) நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே , அனைத்து வகையான பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 01.02.2022 முதல் பள்ளிகள் செயல்பட அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது