அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி!

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி. பிப்ரவரி 5, 12 மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் 


3 கட்ட பயிற்சி முகாம், பொதுத்தேர்வு பணிகள் பாதிக்காத வகையில் தேவையான ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை.


 ஆலோசனை தொடங்கியது


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேரில் ஆலோசனை


சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது


முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், மாநில தேர்தல் ஆணையரின் இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பங்கேற்கவில்லை.


இன்று மாலை 3 மணிக்கு  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்..



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments