10.01.2022 முதல் கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியினை வட்டாரத் தலைமையிடத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியினை மையமாகத் தெரிவு செய்துகொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது சார்ந்து பின்வரும் கூடுதல் தகவல்கள் வழங்கப்படுகிறது:
பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாயின் முதன்மைக்கல்வி அலுவலர்கள் , அவ்வட்டாரத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை பயிற்சி மையங்களாகத் தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப கருத்தாளர்களை நியமித்துக் கொள்ளவும் . பயிற்சிக்கான அறையில் ஒரு அறையில் 20 ஆசிரியர்களை மட்டுமே சமூக இடைவெளியைப் பின்பற்றி அமரச் செய்தல் வேண்டும். பெரிய அறையாக இருப்பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்களை அமரச் செய்தல் வேண்டும்.
பயிற்சி வளாகத்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயம் பின்பற்றப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கு வருகை தரும் போதே உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவியின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடத்திற்கான இரண்டாம் நாள் பயிற்சியில் பங்கேற்கும் போது மட்டுமே , அப்பள்ளியிலுள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகத்தை மதிப்பீடு மற்றும் பின்னூட்டம் அளிப்பதற்காக பயன்படுத்துவர். பயிற்சிக்கு காற்றோட்டமான வகுப்பறைகளை பயன்படுத்தவும். மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தவறாமல் பின்பற்றி சிறப்பான முறையில் பயிற்சியினை நடத்திட தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது