அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் " செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.



School Grant Proceedings - Download here...

ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வியின் கீழ் , 2021-22 ஆம் கல்வியாண்டில் பார்வையில் காணும் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளின்படி , Quality Components ( Elementary ) என்ற தலைப்பில் , நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் ( Twining of Schools ) என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் எனமொத்தம் 16432 பள்ளிகளுக்கு ( ஒரு பள்ளிக்கு ரூ .1000 / - வீதம் ) ரூ .164.32 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் ” அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புறப் பள்ளிகளுடன் இணைப்பதே இச்செயல்பாட்டின் உரிய நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பரிமாற்றுப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி இணைப்பு பள்ளிகளில் வசதிகள் , கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப்பயணமாக அப்பள்ளியை சுற்றியுள்ள வளங்கள் , பல்வேறு இயற்கை சூழல்கள் , அலுவலகங்கள் , வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள்ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments