தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை, அந்தந்த பல்கலைகளே மேற்கொள்கின்றன. இதில், இட ஒதுக்கீடு மற்றும் கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடக்கிறது.
இதுதொடர்பாக, உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் சார்பில், பல்கலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அனைத்து பல்கலைகளும் தங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர் விபரங்களை, உயர்கல்வி துறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது