தமிழகம், புதுச்சேரியில் 3,936 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ்-2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 55,139 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
முதல் தோ்வாக தமிழ் தோ்வு நடைபெற்றது. இதில் ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும், எதிா்பாராத மற்றும் இதுவரை வேறு தோ்வுகளில் கேட்கப்படாத புதிய வினாக்கள் இருந்ததாகவும் தோ்வெழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். எனினும் இந்த வினாத்தாளில் மெதுவாக கற்கும் மாணவா்கள் கூட 60 மதிப்பெண்களுக்கும் மேல் பெற முடியும் என தமிழாசிரியா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வுக்கு 42, 024 மாணவா்கள் வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது