விடைக்குறிப்புகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் , ரூ .200 பதிவுக் கட்டணம் செலுத்தி அதுகுறித்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் , பிடி.எஸ் , இயற்கை மருத்துவப் படிப் புகள் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17 - ஆம் தேதி நடைபெற்றது . நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தில் சென்னை , கோவை , கடலூர் , காஞ்சிபுரம் , கரூர் , மதுரை , நாகர்கோவில் , நாமக்கல் , சேலம் , தஞ்சாவூர் , திருவள்ளூர் , திருச்சி , திருநெல் வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் 200 - க்கும் மேற் பட்டமையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நிக ழாண்டு நீட் தேர்வுக்கு தமிழ கத்தில் 1.41 லட்சம் பேர் விண் ணப்பித்திருந்தனர். அவர்க ளில் 90 சதவீதத்துக்கும் மேற் பட்டோர் தேர்வில் பங்கேற்ற தாக மருத்துவக் கல்வி இயக்கசு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடம் , குஜ ராத்தி , மராத்தி , ஓடியா , அஸ் ஸாமி , வங்காளம் , உருது உள் ளிட்டமொழிகளில் தேர்வு நடைபெற்றது.
அதற்கான முடிவுகள் வரும் செப் . 7 - ஆம் தேதி வெளியாக வுள்ள நிலையில் விடைக்குறிப் புகள் என்டி.ஏ இணையதளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியாகின.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது