இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் பொன்முடி தமிழகத்திற்கு இணையான தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட இருப்பதாக தெரிவித்தார். பொறியியல் படிப்பை படித்து முடிப்பவர்கள் அவரவர் பகுதிகளில் சிறு, குறு தொழில்களை தொடங்க வேண்டும் என்றும், அதற்காக படிப்புடன் கூடுதல் படிப்புகளை கற்பித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முன்னதாக பேசிய முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதய சந்திரன் வேலை வாய்ப்பிற்கேற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ,மாணவர்களை தயார் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது