அரையாண்டுத் தோ்வு, கலைத் திருவிழா உள்பட பள்ளிக் கல்வித் துறை தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டிச.12, 13-ஆம் தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளாா்.
பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை கண்காணிப்பதற்காக நடத்தப்படும் மாதாந்திர அலுவல் ஆய்வுக் கூட்டம் கோட்டூா்புரத்தில் டிச.9, 10-ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையை முன்னிட்டு இக்கூட்டம் டிச.12, 13-ஆம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா், துறைசாா் இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது