குரூப் 4 தோ்வு உள்பட அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டுத் திட்ட அறிக்கை விவரம்: மீன்வளத் துறை சாா்-ஆய்வாளா் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
எழுத்துத் தோ்வு வரும் ஜன. 29-இல் நடக்கிறது. மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுகாதார அலுவலா் பதவிக்கான காலியிடங்களை நிரப்ப ஏற்கெனவே தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, அடுத்த ஆண்டு பிப். 13-இல் எழுத்துத் தோ்வு நடத்தப்படவுள்ளது.
குரூப் 2 தோ்வு: குரூப் 2 தோ்வுக்கான முதல்நிலைத் தோ்வு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப். 25-இல் முதன்மைத் தோ்வு நடத்தப்படவுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை இந்த மாதம் வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு அடுத்த ஆண்டு ஏப். 9-இல் நடத்தப்படும்.
அதிக காலிப் பணியிடங்களைக் கொண்டு நடத்தப்படும் குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை அடுத்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும்.
ஒருங்கிணைந்த பொறியாளா் பணிகளுக்கான காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பரில் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, டிசம்பரில் எழுத்துத் தோ்வு நடத்தப்படும் என்று ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது