அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழக அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களே., 2024 மார்ச் மாத ஊதியம் வரவில்லையா? இதுதான் காரணம்?

கடந்த 2023-24 ஆம் நிதியாண்டின் கடைசி நாளான நேற்று (மார்ச் 31) ஞாயிற்றுக்கிழமை முடிவடைவதால் பல்வேறு பணிகளும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 மார்ச் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இன்று (ஏப்ரல் 1) முதல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


அப்படி இன்று வரவு வைக்கப்படவில்லை எனில் நாளை (ஏப்ரல் 2) மாலைக்குள் மார்ச் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் என ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தகவலை அலுவலர்களுக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

Reactions

Post a Comment

0 Comments