அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TRB - இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு!!!

 1224811

அரசுப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 15-ம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது.


இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.


இதனிடையே, அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Reactions

Post a Comment

0 Comments