அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC - குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

IMG_20240902_171858

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.


தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது.


துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப்-1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன.


குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.


குரூப்-1 முதன்மைத் தேர்வு டிச.10 முதல் டிச.13 வரை நடைபெறவுள்ளது.


இந்நிலையில், குரூப்-1 முதல்நிலை தேர்வு நடந்த 50 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டது.


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.

Reactions

Post a Comment

0 Comments