அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தொடக்க கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வு வருகிற மே மாதம் 23-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ந்தேதி வரையிலும், 2-ம் ஆண்டு தேர்வு ஜூன் 3-ந்தேதி முதல் ஜூன் 11-ந்தேதி வரையிலம் நடைபெறுகிறது.
இதற்கான, தனித் தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. தனித் தேர்வர்கள், தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள், வருகிற 25, 26 ஆகிய தேதிகளில், சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000 செலுத்தி தட்கள் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது