அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு: அரியர் மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

1500x900_43821423-etail

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுகள், அடுத்த மாதம் (ஜூன்) தொடங்க இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், படித்து பல்கலைக்கழக வரன்முறையில் அனுமதிக்கப்பட்டுள்ள படிப்புக்கான உச்ச காலத்தை கடந்தும் பல்வேறு மாணவர்கள் அரியர் வைத்திருக்கிறார்கள்.


அந்த வகையான மாணவர்கள், பயன்பெறும் வகையில் வருகிற ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வில் அவர்கள் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது கடைசி வாய்ப்பு என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.


இந்த சிறப்பு தேர்வானது, சென்னை, விழுப்புரம், ஆரணி, ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மையங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள், https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் வருகிற 17-ந்தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், சிறப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஹால்டிக்கெட் ஆகியவை குறித்த விவரங்கள் வருகிற 27-ந்தேதிக்கு பிறகு தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும். அதனால், தேர்வர்கள், https://aucoe.annauniv.eduஎன்ற இணையதளத்தை தொடர்ந்து கவனிக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.

Reactions

Post a Comment

0 Comments