சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் பிரச்சினை மற்றும் மறுமதிப்பீட்டுக்கு ஜூன் ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 12-ம் வகுப்பு விடைத்தாள் பிரச்சினைகள் (விடைத்தாளில் பக்கங்கள் மற்றும் கூடுதல் விடைத்தாள், வரைபடம், கிராப்ஸ் காணாமல் போயிருப்பது) மற்றும் மறுமதிப்பீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு (https://www.cbse.gov.in/) ஜூன் 2-ம் தேதி தொடங்கியுள்ளது
விடைத்தாளில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புவோர், அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு விண்ணப்பம் போதுமானது.
இந்த வசதியை விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். விடைத்தாள் பிரச்சினைக்கு ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ.100. மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரிய கட்டணத்தை யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனி்ல் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு சிபிஎஸ்இ வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது